சண்முகபாண்டியன் டாட்டூ ஒட்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகும் போட்டோ

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர் சகாப்தம் படம் மூலம் கதாநாயகனாக தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உலகுக்கு என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் டெரர் கண்களை தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். பின்னர் லண்டன் சென்று திரும்பிய அவர், தன் கையில் வரைந்த டாட்டூ கண்களை தந்தை விஜயகாந்த்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். இந்நிலையில், விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் டாட்டூ ஒட்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.